scroll

திருப்பத்தூர் பற்றிய தமிழ்க்களஞ்சியம் வலைப்பூ உருவாக்கும் முயற்சி இனிதே தொடங்கி உள்ளது . உங்களை அன்போடு எனது வலைப்பூவைக் காண அழைக்கிறேன்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

திருப்பத்தூரில் நடக்கும் திருவிழாக்கள்




மாரியம்மன் திருக்கோயில்
     வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் செலந்தம்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இது திருப்பத்தூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

  
                              தெய்வங்கள்                             
  • மாரியம்மன்
  • விநாயகர்
  • முருகப்பெருமான்
  • ராகு பகவான்
  • பேச்சியம்மன்
  • சப்தகன்னிமார்கள்
  • பேச்சியம்மன்

ராகு பகவான்                   
                
 
    
       பின்பற்றப்படும் திருவிழாக்கள்
            சித்திரைப் புத்தாண்டு
            ஆடி மாதத் திருவிழா
            நாக பஞ்சமி
            திருவாதிரை திருவிழா  
மார்கழி உற்சவம்
தைப் பொங்கல்
பௌர்ணமி மற்றும் அமாவாசை

ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத் திருவிழா
     மாரியம்மன் கோவிலில் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் அரங்கேறும் இவ்விழாவில் அம்மனுக்கு கரகம் தூக்குதல், கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல் மற்றும் மாரியம்மன் உற்சவம் இரவு நேரத்தில் நடக்கும்.
     அத்துடன் மிகவும் பிரசித்தி பெற்ற மாதங்களான மார்கழி, தை மற்றும் சித்திரை மாதங்களில் அம்மனுக்கு அலங்காரமும் வழிபாடுகளும் நடைபெறும்.

5 கருத்துகள்: