scroll

திருப்பத்தூர் பற்றிய தமிழ்க்களஞ்சியம் வலைப்பூ உருவாக்கும் முயற்சி இனிதே தொடங்கி உள்ளது . உங்களை அன்போடு எனது வலைப்பூவைக் காண அழைக்கிறேன்.

புதன், 10 செப்டம்பர், 2014

திருப்பத்தூாில் எலும்பு முறிவுக்கான உடனடி மருத்துவம்

புத்தூா் கட்டு - எலும்பு முறிவுக்கான உடனடி மருத்துவம்

       சில வருடங்ளுக்கு முன்பு திருப்பத்தூாில் வாழும் மக்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூா் என்ற கிராமத்து அழைத்துச் சென்று மருத்துவம் பாா்பாா்கள்.  அவர்கள் எலும்பு முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக் கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி ஊற்றச்சொல்வார்கள்.  
                  வாரத்திற்கு ஒரு முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும் வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான் எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.

எல்லாம் நாட்டு வைத்தியம்தான். கோவையில் தெலுங்குபாளையம் உடையார் வைத்தியசாலை மிகப்பிரசித்தம். இங்கு சரியாகாத உடைந்த எலும்பு எங்கு போனாலும் சரியாகாது என்று சொல்வார்கள். இப்படி ஊர் ஊருக்கு ஒரு வைத்தியசாலை இருக்கும். சென்னைவாசிகள் புத்தூர் வைத்தியத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்திருப்பார்கள்.

இந்த வைத்தியம் மிகவும் எளிமையானது. ஏழைகளுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. என்ன, வீட்டில்  மற்றும் துணிமணிகளில் எண்ணை நாற்றம் போக ஓரிரு வருடங்கள் ஆகலாம். அவ்வளவுதான். இந்த மாதிரி வைத்தியங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்ததற்கு காரணம் எலும்புகளின் தன்மைதான்.     


      இன்று புத்தூா் மருத்துவா்லே திருப்பத்தூரை நாடி வந்துவிட்டாா்கள்.

புதன், 3 செப்டம்பர், 2014

தமிழ்க்களஞ்சியம்

 தமிழ்க்களஞ்சியம் சின்னம்

  விளக்கம்

      "தமிழ்க்களஞ்சியம்" தமிழ் மொழியின் சிறப்புகளை ஒன்றாக சேமிக்கும் ஒரு புதிய முயற்சி. களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும்.

   இந்த தமிழ்க்களஞ்சிய வலைப்பூவும் தமிழின் முக்கிய சிறப்புகளை ஒன்றாக சேமிக்கும் ஒரு புதிய முயற்சி மற்றும் தமிழில் அழிந்து வரும் சில முக்கியமானவற்றையும் இங்கு நீங்கள் காணலாம்.
   

    தமிழ்க்களஞ்சியம் நம் அனைவராலும் பயன்படுத்தத் தக்க வலைப்பூ என்பதை  நான் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் தொரிவித்துக்கொள்கிறேன்.
    நம்மில் எத்தனை பேருக்கு நாம் வாழும் இடத்தின் வரலாறு தெரியும். அதன் வளமை, பெருமைகளை முழுதாக உணர்ந்திருக்கிறோமா? அல்லது அதன் பாரம்பரிய, ஆரோக்கியமான உணவை சுவைத்து இருக்கிறோமா? இல்லை! என்பதே நம்மில் பெரும்பாலோர் கூறும் பதில்கள்.  

    இந்த தேடல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளியாக இதோ யாம் உரையும் திருப்பத்தூரின் வரலாற்றுச்சிறப்புகள்.

திருப்பத்தூாில் வாழும் கலையும் மற்றும் கலைஞர்களும்



கலைகள்
      

தெருக் கூத்துக் கலை


     
      கைவினைக்கலைகள்:                                                                             
  1. மண்பாண்டக் கலை
  2. மூங்கில் கலை
  3. பாய் முடைதல்
  4. நாதசுரம் செய்யும் கலை
  5. தஞ்சை ஓவியங்கள்
  6. பட்டு நெசவு
  7. பிரம்புக்கலை
  8. மண்பொம்மைகள்
மூங்கில் கலை



மலைவாழ் மக்கள் அங்குள்ள பொருட்களை கொண்டு கூடை வேய்தல், முறம் செய்தல் மற்றும் சிறு சிறு கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். திருப்பத்ததூரை சுற்றியுள்ள மக்களும் இவ்வகையான தோழிகளில் ஈடுபட்டு தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் துணையாக உள்ளது.

பட்டு நெசவு


  நெசவுத்தொழில் இவ்வூரைச் சுற்றியுள்ள மக்களின் முக்கிய தொழிலாகும். தங்கள் இல்லங்களிலேயே தறி அமைத்து பலவிதமான துணிகளை நெய்து வருகின்றனர்.


துணி வகைகள்

பட்டுப்புடவை
வேட்டிகள்
கூரைப் புடவைகள்
பருத்தி ஆடைகள்
 
பட்டு நெசவு
பாவோடும் தோப்பு
இவர்கள் தங்கள் வீதிகளில் பாவை அமைத்து பட்டு இழைகளை சரிபார்ப்பர். இதனாலேயே இங்குள்ள சில வீதிகள் பாவோடும் தோப்பு எனவும் அழைக்கப்படுகிறது.